தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்
நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி
வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ
தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகி
விட்டாச்சே. வீட்டி லேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங் களுக்கு
சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம்
பருகும் தண்ணீரி லிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக
மாறிவிட்டது.
சுத்தமான
சந்தனத்தை உரைத்து, அதை மிளகு
அளவு எடுத்து, 60 மி.லி.
தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம்
சிறிதளவு எடுத்து, கொதிக்கும்
தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை
ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெது வெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப்
பிரச்சினையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.
மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம்
ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக்
கொடுத்தால், செரிமானக்
கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில்
முன்பெல்லாம் 'ஓமவாட்டர்
கண்டிப்பாக இருக்கும்.
பெரியவர்களுக்கும்
குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக்
கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச்
சீராக்குவதுடன், வயிற்றை
இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.
அந்தக்
காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர் போன்று செயல்படும்.
கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே
செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச்
சக்தியை அதிகப்படுத்த உதவும்.
விடுதலை,திங்கள், 24 நவம்பர் 2014 14:52
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக