பக்கங்கள்

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

குடல் புற்று நோயைத் தடுக்கும் சாம்பார்

தினமும் சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்று நோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச் சியாளர்கள்.

மணிப்பால் மருந்தியல் கல்லூரியும், மணிப்பால் பல்கலைக்கழகமும் இணைந்து தென்னிந்தியர் களின் முக்கிய உணவான சாம்பாரில் குடல் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது எனக் கண் டறிந்துள்ளனர்.

மருந்தியல் ஆய்வாளர்கள் வி.கங்கா பிரசாத், அல்பி பிரன்சிஸ், கே. நந்தகுமார் ஆகியோர் மேற் கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் பார்மகோக் னாஸி மேகசின் எனும் மருந்தியல் இதழில் சமீ பத்தில் வெளியாயின.

உலகளவில் நடத்தப்பட்ட புற்றுநோய் தொடர் பான ஆய்வுகளில் அதிக அளவு மஞ்சள் உட் கொள்வதால் குடல் புற்றுநோய், மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவரீதி யான ஆய்வில் அமெரிக்கர்களைத் தாக்கும் புற்று நோய்களில் குடல் புற்றுநோய் மூன்றாவது இடத் தில் உள்ளதும் அது பெரும்பாலும் உணவுப் பழக் கத்துடன் தொடர்புடையதாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதிக அளவு மஞ்சள் மற்றும் ஆன்டி ஆக் சிடண்ட் அதிகம் கொண்ட வெங்காயம் சேர்த்த உணவுப் பொருட்களில் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என் கின்றனர் ஆய்வுக் குழுவினர்.

மரபுரீதியாகச் சிலருக்கு, குடல்களில் பாலிப்ஸ் எனும் சிறு கட்டிகள் தோன்றும். முறையாகக் கவனிக்காமல் விட்டால், இவை பின்னாளில் புற்று நோயாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம். இந்தக் கட்டிகளுக்கு ஏற்ற அருமருந்தாக சாம்பார் இருப்ப தாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அந்த சாம்பாரில் உள்ள மசாலாப் பொருட்கள்தான்.

சாம்பாரில் உள்ள மல்லிவிதை, வெந்தயம், மஞ்சள், கறுப்பு மிளகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங் காயம் ஆகிய மசாலாப் பொருட்களால் புற்று நோய்க் கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத்தின் புற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் முதன்மை ஆய் வாளர் ஒருவர் கூறும்போது சாம்பாரில் பயன்ப டுத்தப்படுகிற ஒவ்வொரு மசாலாப் பொருளும் தனித்தன்மை உடையதாக உள்ளது. சாம்பாரில் உள்ள சீரகம், பெருங்காயம் போன்ற பொருட்கள் உடலுக்குச் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன. செரிமானம் நன்றாக இருந்தாலே, குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்.

பொதுவாக சாம்பார் அதிகளவு காரம் இல்லாத உணவாக இருப்பதால் குடலின் உட்புறம் பாதுகாக் கப்படுவதுடன், குடல் புற்றுநோயை உண்டாக்கும் டைமெத்தில்ஹைட்ராக்சின் எனும் காரணியை, சாம்பாரில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுகின்றன என் கிறார் புற்றுநோய் மருத்துவர் எஸ்.வி.எஸ்.எஸ்.பிரசாத்.

இந்தியாவைப் பொறுத்தவரை குடல் புற்று நோயின் தாக்கம் வடஇந்தியர்களுக்குத்தான் அதி களவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர் களின் உணவில் கோதுமை அதிக அளவு இருப் பதே. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், தென்னிந்தியர்களின் உணவு முறையில் எளிதில் செரிமானமாகக்கூடிய பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் குடல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களில் 70 சதவீதத்தினர் வடஇந்தியர்கள். பொதுவாக வறுத்துப் பொடித்த மசாலாப் பொருட் களை அவர்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்கின் றனர். ஆனால், தென்னிந்தியர்களின் உணவில் பெரும்பாலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மஞ்சளில் பொதுவாகவே புற்றுநோயைத் தடுக்கும் அம்சங்கள் உண்டு. அதனால், இவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்கிறார் புற்றுநோய் மருத்துவர் டி.பி.எஸ்.பண்டாரி.
-விடுதலை,4.9.17