பக்கங்கள்

சனி, 14 நவம்பர், 2015

ஆயுர்வேதத்தில் மாட்டிறைச்சி மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது அறிவியல் அறிஞர் பி.எம். பார்கவா அறிவிப்பு


இந்தியாவின் பழமை யான வேதமருத்துவ முறை யாகக் கருதப்படும் ஆயுர் வேதத்தில் மாட்டிறைச்சி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தலைசிறந்த ஆயுர் வேத நூலாசிரியரும் ஆயுர் வேத மருத்துவருமான ஆச்சாரியா சரகா தன்னு டைய நூலில் மாட்டி றைச்சியின் மருத்துவ குணம் பற்றி அதிகமாக குறிப்பிட்டுள்ளார் என்று பிரபல அறிவியல் ஆய்வா ளரான பி.எம்.பார்கவா கூறியுள்ளார்.
பசு இறைச்சியின் பயன்கள்
சாரக சம்ஹிதா என்ற ஆயுர்வேத நூலாசிரியரின் குறிப்புகள் பற்றி ஆய்வு செய்த பார்கவா இது குறித்து பத்திரிகையளர்களி டம் பேசினார், அப்போது அவர் கூறியதாவது: பசுவின் இறைச்சித் துண்டை நன்கு வேக வைத்து உண்ணும் போது காய்ச்சல், வாயு தொடர் பான சிக்கல்கள், வறட்டு இருமல், உடல் மெலிவு அல்லது சோர்வு, போன்ற நோய்கள் உடனடியாகக் குணமடையும். மேலும் கடுமையான உழைப் பாளிகள் தங்களது உட லுக்கான சக்தியை உடன டியாகப் பெற பசுவின் இறைச்சியை உண்ண வேண்டும், பசுவின் எலும் பில் இருந்து காய்ச்சி வடித்த நீர்(சூப்) முதுகுவலி, உட்பட பல்வேறு எலும்பு தொடர்பான நோய்களைக் முற்றிலும் குணப்படுத்தும் தன்மையுடையன என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் முக்கிய திட்டம்
தாதரியில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் அக்லாக் என்ற முதியவர் பசுமாட்டிறைச்சியை உண் டார் என்று வதந்தியைப் பரப்பி அவரைக் கொலை செய்ய முக்கியமான கார ணமாக கூறும் போது, புனிதமான பசுமாட்டைக் கொலைசெய்தார் என்பது தான் இதைவைத்து தான் பல்வேறு இந்து அமைப்பு களுடன் பாஜகவும் கூட்டு சேர்ந்து அக்லாக் கொலை வரை சென்று விட்டது. அக்லாக் கொலையைப் பொறுத்தவரை பசுமாடு குறித்த ஓர் அச்சத்தை சிறு பான்மை மக்களிடையே உருவாக்கி அவர்களை பதற்றமான மனநிலையில் வைக்கவேண்டும் என்பதே ஆளும் பாஜகவின் முக் கியத் திட்டமாக உள்ளது. இந்த கொலை மூலம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புக்கள் என்ன கூற வருகின்றன என்றால், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதை இவர் கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நினைக் கின்றனர்.   மேலும் அறிவியல் அறிஞர் பார்கவா கூறும் போது மோடி அரசு அறிவியல் ஞானமற்ற போலித்தனமான கட்டுக் கதைகளை அறிவியல் என்று நம்பிக் கொண்டு இருக்கும் அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார். மோடி மதரீதியான நூல்களில் குறிப்பிட்டுள்ள கட்டுக் கதைகளை அறிவியல் என்று பல்வேறு தளங்களில் பேசி வருகிறார். இது மிகவும் கவலைக்குரியதாகும், மோடி போன்றவர்கள் இப்படிக்கூறும் போது உண்மையாக அறிவிய லுக்கு கட்டுக்கதைகளுக்கு இடையே வேறு பாடு தெரியாமல் இளம் தலை முறையினர் குழப்பமடை வார்கள்.
காலத்திற்கு ஒவ்வாதவை
மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை களை நிறைவேற்றுவ தையே மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது தலை யாய கடமைகளாக கொண்டு செயலாற்றிவருகிறது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் என்றுமே காலத்திற்கு ஒவ்வாதவை, அதில் ஒன்றுதான் பசு தொடர்பான பிரச் சனைகள் மத்திய பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டில் மதநல்லிணக்கம் மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருக்கிறது, தற் போது அதன் வேகம் மேலும் அதிகரித்துள்ளது என்றும் கூறினார். ஆளும் பாஜக அரசு இந்திய அரசியலமைப்புச் சட் டத்தில் குறிப்பிட்டுள்ள அறிவியல் மனப்பான்மை மனிதத்தன்மை பகுத்தறிவு (கேள்வி கேட்கும் உரிமை) சீர்திருத்தம் போன்றவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற 51ஏ(எச்) என்ற சரத்தையே கேலிசெய்யும் விதமாக மூடநம்பிக்கை களை அறிவியல் என்று கூறுதல், அறிவிற்கு பொருத் தமில்லாத கட்டுக்கதை களை பாடமாகச் சேர்த்தல், இந்துத்துவ ஆதரவு மூட நம்பிக்கை எழுத்துக்களை அரசே பரப்பி வருவது போன்ற பல்வேறு செயல் பாடுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களாக உள்ளது. மோடி அரசு இதையே தன்னுடைய கொள் கைகளாகக் கொண்டு அரச அதிகாரத்துடன் மக்களி டையே பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகிறது, கடந்த ஆண்டே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பெண்கள் என்பது ஆண்களுக்கு அடிமைகளாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி கற்ப தனால்தான் விவாகரத் துகள் அதிகம் உண்டாகின் றன என்றும் நமது கலாச் சாரத்தில் திருமணம் என்பது ஆண்களுக்கான சேவை செய்ய பெண்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் தானே தவிர, பெண் ஆணைவிட அதிக அதிகாரம் பெறக் கூடாது என்று கூறுகிறார். இதிலிருந்தே அந்த அமைப்பின் பிற்போக்குக் கொள்கை எப்படிப்பட்டது என்று தெரியவரும் என்றார்.
குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
பகுத்தறிவுவாதிகளும், தர்க்கவாதிகளுமான நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி போன்றோரின் கொலைகள் தொடர்பாக தனது கவலையைத் தெரிவித்த பார்கவா நவம்பர் 6 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  சுமார் 200க்கும் மேற்பட்ட பல்வேறு அறிவியல் ஆய் வாளர்கள் கையெழுத்து அடங்கிய அந்தக் கடித்ததில் நாட்டில் நடக்கும் சமூக அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் சம்பவங்கள் குறித்து அறிவுஜீவிகள் கவலைய டைந்துள்ளதாகவும், குடியரசுத் தலைவர் தலையிட்டு இந்தச் சிக்கலுக்கு முடிவு செய்ய வேண்டும் என்று  பி.எம். பார்கவா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-விடுதலை,14.11.15
.

புதன், 19 ஆகஸ்ட், 2015

எளிய இயற்கை வைத்தியக் குறிப்புகள்

Image result for இயற்கை மருத்துவம்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
அய்ந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு குவளை தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்தச் சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு,உடல் குளிர்ச்சி யடையும்.அல்லது ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயுத் தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட் கொள்வதினால் வாயுத் தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா, ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பல் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்சியில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. செரிமானக் கோளாறு
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், செரிமான கோளாறு சரியாகும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் கோளாறு குணமாகி பசி ஏற்படும்.
ஒமம், கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் செரிமானக்கோளாறு சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
-விடுதலை,17.8.15

சனி, 15 ஆகஸ்ட், 2015

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?


சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ... சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
தனியா - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ
தனித்தனியாக மேற்கண்டவற்றை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து தனித் தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு தேக்கரண்டி பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி தினமும் மூன்று வேளை சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
-விடுதலை,10.8.15

திங்கள், 24 நவம்பர், 2014

தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகி விட்டாச்சே. வீட்டி லேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங் களுக்கு சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம் பருகும் தண்ணீரி லிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக மாறிவிட்டது.
சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெது வெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்சினையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.
மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர் கண்டிப்பாக இருக்கும்.
பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.
அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர் போன்று செயல்படும். கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.
விடுதலை,திங்கள், 24 நவம்பர் 2014 14:52

சனி, 1 நவம்பர், 2014

இராவண மருத்துவ நூல்கள்

பிற மொழிகளில் இராவண 


மருத்துவ நூல்கள்

புனித இராவணன் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தாய் தனித் தமிழில் இயற்றிய ஆதித் தமிழர்களின் அரிய மருத்துவக் கலை, தமிழ் மக்களின் அறி வுக்கு எட்டாதவாறு அபகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டும், அடுத்தவர் மொழிக்கு மாற்றப்பட்டும் விட்ட சூழ்நிலையில் இவ்வையகத்து மக்களின் மெய் நலனுக்காக தமிழ் மருத்துவம் தந்த அந்த ஒப்பற்ற தமிழ்த் தலைவரை இழிவுபடுத்தித் திட்டமிட்டு எழுதி வைத்த கட்டுக் கதைகளை நம்பி வாழ்ந்துவரும் தமிழ்  மக்கள் மத்தியில் அவர் இயற்றிய தமிழ் மருத்துவம் பிற மொழி மருத்துவர்களால் அபகரித்து எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இராவணனை இழிவுபடுத்தி இட்டுக் கட்டிய பொய்க் கதைகளை எழுதி தமிழர்களிடம் அன்னாரை ஒரு அரக்கனாக, கொடுங் குணங் கொண்டவனாக சித்தரித்து மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, அவர் இயற்றிய மருத்துவத்தை அன்னாரை இழிவுபடுத்தியவர்களால் பெருமளவில் கையாளப்பட்டு வரும் நிச நிலையை தமிழ் மருத்துவர்களும், தமிழ் கூறும் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டு மென்ற நன்னோக்கத்தில் எங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதார அடிப்படை யில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1.இராவணன் தீ நீர் மருத்துவம்: அர்க்கபிரகாசம் எனும் பெயரில் மலையாள மொழியில் வெளியிடப் பட்டுள்ளது. இந்நூல் மூலிகை மற்றும் கடைச் சரக்குகளை முறைப்படி தீ நீராகச் செய்து அனைத்து வகையான வியாதிகளுக்கும் வழங்கும் அரிய மருத்துவ முறையாகும்.
இந்நூலை மீண்டும் தமிழாக்கம் செய்து சென்னை பெசன்ட் நகர் முனைவர் இர. வாசுதேவன் Ph.D. அவர்கள் வெளியிட் டுள்ளார்கள். தொடர்புக்கு அலைபேசி - 9444892216. மேலும் இராவணன் இயற்றிய குழந்தை மருத்துவம் குமார தந்திர என்ற பெயரில் ஆந்திராவில் தெலுங்கிலும் வட இந்தியாவில் ஆங்கி லத்திலும் இராவணன் பெயரிலேயே நூலாக உள்ளது என்ற தகவலையும், முனைவர் இர. வாசுதேவன் அவர்கள் எமக்கு அளித்துள்ளார். எனவே குமரி மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள குழந்தை மருத்துவத்தின் மூல நூல் இராவணன் இயற்றிய மதலைவாகட நூலே என்பது தெளிவாக தெரிகிறது.
2. இந்த தீ நீர் மருத்துவ நூல் தெலுங்கில் அர்க்க பிரகாச என இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இராவணன் இயற்றிய மாதர் மருத்து வத்தில் ஒரு சிறு பகுதி அடங்கிய நூலும் தெலுங்கு மொழியிலுள்ளது.
3. இராவணன் மருத்துவ நூல் பல, தென் இலங்கையில் சிங்கள மொழியில் இருப்பதாக 2000ஆம் ஆண்டு தமிழ் ஈழத்திலிருந்து மரு. சிவ சண்முக ராசா  (சி), (கந்தரோடை, சுன்னாகம்) அவர் களால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து சித்த மருத்துவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. இராவணன் தீ நீர் மருத்துவ நூல் 16ஆம் நூற்றாண்டில் உருது மொழியில் மொழி பெயர்த்து பாகித்தானில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒரு தகவல் உள்ளது.
5. இந்தி மொழியில் இராவணன் சம் கீத என்ற பெயரில் இராவண மருத்துவ இரு அறிவியல் நூல்கள் வட இந்தியா வில் வெளியிடப்பட்டுள்ளன. அவற் றிலுள்ள உள்ளடக்க அறிவியல் தகவல் இங்கே தரப்படுகின்றன.
1. இராவணன் பிறப்பு, 2. வான் அறிவியல், 3 நட்சததிரங்களின் நகர்வு, 4. மதலை நோய் மருத்துவம் (குழந்தை மருத்துவம்), 5. மக்கள் நோய் மருத்துவம், 6. பற்ப, செந்தூர, தீ நீர் வகைகள், 7. மானுட மருத்துவம் , 8.புவியியல் அறிவு தகவல்கள், 9. இரச மருந்துகளின் வீரி யங்கள், தயாரிப்பு முறைகள், 10. யோகா சன செய்முறைப் பயிற்சி, 11. யோகாசன மருத்துவப் பரிகார முறை (யோகா தெரபி), 12. யோகாசனங்களின் வகைகள், 13. சஞ்சீவி முறைகள், 14. உப்பு முறைகள், 15. இராமன் இராவணனை புகழ்தல், 16. பொது மருத்துவ அறிவியல் முறை கள், 17. சிர நோய் மருத்துவம், 18. கிரகங் களின் இடப்பெயர்ச்சிக்கு தீர்வு இந்நூல் களில் மேலும் பல தகவல்கள் உள்ளன.
6. இது மட்டுமன்றி இராவணன் இயற்றிய நாடி நூலும் வட இந்திய தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறீ இராவண நாடி கிறிதா என்ற பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட சமஸ் கிருத சுலோகங்களுடன் இந்தி மொழி யில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலை மீண்டும் தமிழாக்கம் செய்து சென்னை தியாகராச நகர் புதிய புத்தக உலகம் சிறிய இராவண நாடி பரீட்சை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
7. பர்மா நாட்டில் இராவண மருத் துவ நூல்கள் மொழி மாற்றம் செய்யப் படாமல் அசல் தமிழ் நூல்களாகவே இருப்பதாக தகவல் உள்ளன. அதை பெறுவதற்கு தமிழக அரசும், தமிழ் மருத்துவ உலகமும் தீவிர முயற்சி மேற் கொள்ள வேண்டும். குமரி மாவட்டத் திலும் கேரள மாநிலத்தில் திருவனந்த புரம் மாவட்டத்திலும் சில குறிப்பிட்ட பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் கோர்வையாக இராவண மருத்துவ நூல்கள் அசல் தமிழ் நூல்களாகவே இருப்பதாக சில ஆசான்கள் கூறுகின் றனர். இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இந்த அறிவியல் கிடைத்திட பாடுபடா விட்டால் மிகப் பெரிய தமிழர் அறிவி யலை நாம் இழந்து விட நேரிடும் என் பதை நாம் நினைவில் கொள்ள வேண் டும். இன்னும் பல அரிய தமிழர் அறிவி யல் தகவல்களுடன் இந்தி மொழியி லுள்ள இராவண நூல்களில் ஒன்று 1 கிலோ எடை உள்ளது. அதன் விலை ரூ.500/-_ இன்னொரு நூல் சுமார் 5 கிலோ எடை உள்ளது அதன் விலை ரூ.2000/-_ இந்நூல்களை வாங்கி படிக்க வும் வாங்கி தமிழாக்கம் செய்யப்படவும் வேண்டும். இந்நூல்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Manoj Publications,
1583-84, Daribakalam,
Chandhi Chowk, Delhi -6,
Mobile - 09818753569
இராவணனின் மற்றுமொரு மிகப் பெரிய இந்தி மொழி நூல் ரூ.7500/-_ பெறுமானது. இது மூன்று தொகுதியாக வெளியிடப்பட்டுள்ள மிகப் பெரிய நூலாகும். இதில் தமிழர்களின் மருத்துவ அறிவியல் அதிகமாக அடங்கியுள்ள தாக தகவல் கிடைத்துள்ளது. அதன் முகவரி மற்றும் தகவல் பெற
Tantratmak ravan Samhita
Edited by Swami Premanand ‘Alakh’
D.P.B. Publications, 110, Chawari Lazar,
Chawk, Badshahbulla, Post Box No:2037,
Delhi- 110 006.  ªî£ì˜¹‚°: 011232516300
தொடர்புக்கு: 011232516300
இந்நூல்களை பெற விரும்புவோர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொண்டு பேசி தகவலறிந்து பணம் செலுத்தி நூலை பெறலாம். இந்த முக வரிகளை எமக்கு அளித்த மரபுதமிழ் மருத்துவர் திரு. தாமரை செல்வன் (வியாசர்பாடி, சென்னை) அவர்களுக்கு நன்றி. அவரது அலைபேசி: 9444580701. அரசு பணியாளரான அவரிடம் இரவு 6.30 மணிக்கு மேல் தொடர்பு கொள்ள லாம். மேலும் வட இந்தியாவில் இந்தி மொழியாக்கம் செய்யப்பட்ட ரூ.20,000/-_ (இருபதாயிரம் விலையுடைய மிகப் பெரிய இராவண நூல் உள்ளது. இன்னும் 50க்கும் மேற்பட்ட பல இராவணன் நூல்கள் வட இந்தியாவில் இருப்பதாக மேலும் சில தகவல்கள் கூறுகின்றன.
(மருத்துவர் பு.சாலின் மனோகர் எழுதிய அவசர கால புறமருத்துவ 

முறைகள் எனும் நூலிலிருந்து....


-விடுதலை நாளேடு 18.10.14

Read more: http://www.viduthalai.in/page-1/89477.html#ixzz3HodiehdA

வியாழன், 30 அக்டோபர், 2014

கரிசலாங்கண்ணி இளகியம்

ÞóˆîŠ ªð¼‚A- èKêô£ƒè‡E Þ÷Aò‹

èKêô£ƒè‡E„ ê£Áì¡ ð¬ùªõ™ôˆ¬î «ê˜ˆ¶ è‹HŠðîñ£è 裌„ê «õ‡´‹.
FŠHL, è‡ìˆ FŠHL, ªêšMò‹, CˆFóÍô‹ «õ˜Šð†¬ì, ²‚° õ¬è‚° å¼ ðô‹ Éœ ªêŒ¶ êLˆ¶;
ܶ«ð£ô, ôõƒèŠð†¬ì, ܺ‚Aó£ƒAöƒ°, ãôKC õ¬è‚° 2½ ðô‹ Éœ ªêŒ¶ êLˆ¶; 裌„Cò ð£°ì¡ ÞõŸ¬ø ÉM A÷ø «õ‡´‹, ÞîÂì¡ «î¬õò£ù Ü÷¾ ªïŒ «ê˜‚è «õ‡´‹.«î‹ «ê˜‚èô£‹.
ªï™L‚裌 Ü÷¾-Þ¼ «õ¬÷

ðC â´‚°‹,Þóˆî‹ ªð¼°‹.