பக்கங்கள்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய சித்தா மருந்துகள்!

 

மருத்துவம் : கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய சித்தா மருந்துகள்!

2022 மருத்துவம் மே 16-31 2022

கரோனா தொற்றாளர்களுக்கு நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் நிலவேம்புக் குடிநீரும், கபசுரக் குடிநீரும் பெரும்பங்காற்றின. முதல் இரண்டு அலைகளில் அறிகுறிகளுடன் கூடிய நோய்த் தொற்றில் கபசுரக் குடிநீரும், அதனுடன் அமுக்கரா மாத்திரை, தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பிரம்மானந்த பைரவம் போன்ற மருந்துகள் நல்ல நலன் தருவதாக இருந்ததை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.
மற்றொரு ஆய்வில் ஆங்கில மருந்துகளுடன் கபசுரக் குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, வசந்த குசுமாகரம் மாத்திரை, திப்பிலி ரசாயனம் ஆகிய சித்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது நல்ல பலன் தருவதாக அறியப்பட்டது.
கபசுரக் குடிநீர் பற்றிய ஆய்வுக்கூட சோதனை மற்றும் மருந்தியல் சோதனையில் வைரசின் அனைத்து உருமாற்றத்திலும் நல்ல பலன் தருவதாக வந்த முடிவுகள் சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
லேசான நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆடாதோடை குடிநீர் எடுக்கலாம். இதில் சேரும் அதிமதுரத்தில் உள்ள ‘கிலிசிரிஸின்’ என்னும் முக்கிய மூலக்கூறு ‘சார்ஸ்-2’ வகை வைரஸ் தொற்றை அழிக்கும் திறன் கொண்டதாக சீன நாட்டின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
ஆடாதோடையில் உள்ள ‘ப்ரோம்ஹெக்ஸின்’ செயல் மூலக்கூறு மூச்சுக் குழாயை விரிவடையச் செய்து இருமலைக் குறைக்கும் தன்மை உடையது. மேலும் ‘திப்பிலி ரசாயனம்’ என்னும் சித்த மருந்து இருமலைக் குறைத்து கெட்டிப்பட்ட சளியை வெளிப்படுத்தும் தன்மையுடையது.
சுவாசப் பாதையை விரிவடையச் செய்து, கெட்டிப்பட்ட சளியை வெளியேற்றவும் ஆடாதோடை மணப்பாகு எனும் சித்த மருந்து பெரும் பயனளிப்பது உறுதி. மூச்சுத் திணறலைக் குறைக்கவும், கபத்தைப் போக்கவும் நொச்சி இலைக் குடிநீர் பயன்படுத்தி நல்ல பலன் காண முடியும்.
நொச்சி, மிளகு, பூண்டு, லவங்கம் போன்ற மூலிகைகளைச் சேர்த்து கசாயமிட்டு குடிக்க, மூச்சுக் குழல் வீக்கத்தைச் சரி செய்து ஆஸ்துமா, மூச்சுத் திணறல் ஏற்படாமல் தடுக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணம் என்ற சித்த மருந்துடனோஅல்லது தாளிசாதி சூரணம் எனும் சித்த மருந்துடனோ பவள பற்பம், சிவனார் அமிர்தம் ஆகிய மருந்துகளைச் சேர்த்து கரோனா கிருமியால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் கொடுக்க நல்ல பலனைத் தரும். ரத்தத்தில் டி_டைமர், பெரிடின் ஆகிய உயிர்வேதி அளவுகள் அதிகரித்து ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத் திணறல் ஏற்படும் நிலைகளில் ஆக்சிஜனுடன் சேர்த்து கிராம்பு சூரணத்துடன் அரிதார செந்தூரம், மகா பூபதி பற்பம், பவள பற்பம் ஆகிய மருந்துகளையும் சேர்த்துக் கொடுக்கலாம்.
இந்நிலையில் பூர்ண சந்திரோதயம் போன்ற தங்கம் சேர்ந்த பெருமருந்தும் நற்பலனைத் தருவதாக உள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தயிர்ச்சுண்டி சூரணம், ஏலாதி சூரணம், நாக பற்பம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள நல்ல பயனளிக்கும். ‘நாக பற்பம்’ எனும் சித்த மருந்தில் உள்ள துத்தநாகம் குடல் செல் ஜவ்வினை பாதுகாப்பதோடு, வைரஸ் பல்கிப் பெருகுவதையும் தடுக்கும் தன்மையுடையது.
நாம் உணவில் சேர்க்கும் மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருளும், மிளகில் உள்ள ‘ஃபைப்ரின்’, பூண்டில் உள்ள ‘அலிசின்’, சீரகத்தில் உள் ‘குமினால்டிஹைடு’ போன்ற அல்கலாய்டு வேதிப்பொருள்களால் நோய் எதிர்ப்பு சக்தியை இயல்பாக அதிகரிக்க இயலும்.
வாழை இலையில் சூடான உணவு போட்டு, உண்பதுகூட நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். வாழை இலையில் உள்ள பிளவனாய்டு வேதிப்பொருள் உணவுடன் கலப்பதே அதற்குக் காரணம். எனவே, சித்த மருத்துவத்தால் எவ்வளவு பெரிய நோய்த் தொற்றையும் எதிர்கொள்ள இயலும்.

திங்கள், 20 டிசம்பர், 2021

மூலிகை மருந்துகளின் தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் அனுமதி நடைமுறையை அரசு நிர்ணயித்தது

ஆயுஷ்

மூலிகை மருந்துகளின் தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் அனுமதி நடைமுறையை அரசு நிர்ணயித்தது

Posted On: 06 FEB 2018 1:46PM by PIB Chennai

ஆயுர்வேத மருந்தியல் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தரமான 645 தனித்தன்மை ஆயுர்வேத மருந்துகளும், 202 கலப்பு மருந்துகளும் அடங்கியுள்ளன.  அரசு வெளியிட்டுள்ள யுனானி மருந்துப் பட்டியலில் தரமான 298 தனித்தன்மை கொண்ட மருந்துகளும், 150 கலப்பு மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.   சித்தா மருந்துப் பட்டியலில் 139 தனித்துவ மருந்துகள் இடம்பெற்றுள்ளன.  985 ஆயுர்வேத மருந்துகள் 1,229 யுனானி மருந்துகள், 399 சித்தா மருந்துகள் ஆகியவற்றை அரசு தரப்படுத்தி அறிவித்துள்ளது. இந்த மருந்துகளில் அடங்கியுள்ள பொருட்களின் பெயர்களும் சம்மந்தப்பட்ட மருந்தியல் பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றுக்கான மருந்தியல் ஆணையமும் மற்றும் மருந்தியல் குழுக்களும் ஆயுர்வேத, சித்தா, யுனானி மருந்துகளை தரப்படுத்தி அமைப்பது தொடர்ந்து நடைபெற்றுவரும் செயல்முறையாகும். இந்த மருந்துகளை சோதிப்பதற்கான மத்திய மற்றும் மாநில மருந்து சோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1945 மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விதிகளின்படி அங்கீகாரம் பெற்ற சோதனைக் கூடங்கள் இந்த மருந்துகளை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட மருந்தியல் ஆவணங்களின்படியான தரங்கள், நல்ல உற்பத்தி நடைமுறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு மருந்து தயாரிப்பாளர்கள் செயல்பட்டால்தான் உரிமங்களைப் பெறும் தகுதி பெறுவார்கள்.  பாதுகாப்பு மற்றும் திறன் சார்ந்த அத்தாட்சிகள் தயாரிப்பு உரிமங்கள் வழங்குவதற்கு மிகவும் தேவையானவை.           1945 - மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் விதிகளின் 158 B பிரிவில் கண்டுள்ளபடி, பல்வேறு வகை ஆயுர்வேத, சித்தா, யுனானி மருந்துகளுக்கு இந்த நடைமுறை பொருந்தும். இந்த சட்டத்தின்படி, மாநில அரசுகள் நியமித்த உரிமம் வழங்கும் ஆணையங்கள் / மருந்து கட்டுப்பாட்டாளர்கள் இத்தகைய உரிமங்களை வழங்கவும், புதுப்பிக்கவும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவார்கள்.  சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொள்ளும் மருந்து தயாரிப்பாளர்கள்மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் இவர்களுக்கு அதிகாரம் உண்டு.

1940-மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் மூலிகை மருந்துகள் அந்தப் பெயரில் வரையறை செய்யப்படவில்லை.  எனினும், மூலிகைகள், தாவரப் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத, சித்தா, யுனானி மருந்துகள் நாட்டில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு நெறிகளின்படி கட்டுப்படுத்தப்படுகின்றன.  இந்த நெறிமுறைகள் 1940 மருந்துகள் மற்றும் அழகுசாதனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் வருபவை ஆகும்.  இந்த வகையில், போலி மருந்துகள் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன.  போலியான, வேண்டுமென்றெ தவறாக வர்த்தகப் பெயர் பொறிக்கப்பட்ட, கலப்படம் செய்யப்பட்ட மருந்துகள் பற்றி 1940 மருந்துகள், அழகு சாதனங்கள் சட்டத்தின் அத்தியாயம் IV-Aல் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் தவறிழைப்பவர்களுக்கான தண்டனை விவரங்களும் தரப்பட்டுள்ளன.  தரக்குறைவான மருந்துகள் குறித்த புகார்கள் சம்மந்தப்பட்ட மாநில கட்டுப்பாட்டு அதிகார அமைப்பிடம் அளிக்கப்படவேண்டும்.  இந்த அமைப்புகள் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்.

2017-18ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சோதனைக் கூடங்கள் நடத்திய ஆயுர்வேத, சித்த, யுனானி மருந்துகளின் சோதனை விபரங்கள் வருமாறு.

 

 

மாநிலம்

சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மருந்து மாதிரிகளின் எண்ணிக்கை

தகுதியற்றவை எனக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து மாதிரிகள் எண்ணிக்கை

மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

தமிழ்நாடு

1255

39

காரணம் காட்டக் கோரும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன

புதுச்சேரி

16

இல்லை

 

மாநிலங்களவையில் இன்று (06.02.2018) ஆயுஷ் துறை (தனிப் பொறுப்பு)  இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் யஸோ நாயக் எழுத்துமூலம் அளித்த பதிலில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 



(Release ID: 1519451) Visitor Counter : 1488


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

சித்த மருத்துவத்தில் நோய்களின் எண்ணிக்கை

அகத்தியர் ரத்தின சுருக்கம் என்ற சித்த மருத்துவ நூலில் 62 வகை நோய்களின் அடிப்படையில், மனிதர்களுக்கு 4448 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
1. வாத நோய்- 84
2. பித்த நோய்- 42
3. சிலேத்தும நோய் - 96
4. தனூர் வாயு- 300
5. கண் நோய்- 96
6. காச நோய்- 7
7. பெரு வயிறு- 8
8. சூலை நோய்- 200
9. பாண்டு- 10
10. சிலந்தி நோய்- 60
11. குன்மம்- 8
12. சந்தி நோய்- 76
13. எழுவை (கழலை)நோய்- 95
14. சுர நோய்- 64
15. மகோதரம் நோய்- 7
16. தலையில் வீக்கம்- 5
17 உடம்பு வீக்கம்- 16
18. பிளவை நோய்- 8
19. படுவன்நோய்- 11
20. தொப்புள் நோய்- 7
21. பீலி நோய்- 8
22. உறுவசியம்- 5
23. கரப்பான் நோய்- 6
24. கெண்டை நோய்- 10
25. குட்ட நோய்- 20
26. கதிர் வீச்சு நோய்- 3
27. பல்-ஈறு நோய்- 6
28. சோகை- 16
29. இசிவு- 6
30 மூர்ச்சை- 7
31. சூலை நோய்- 48
32. மூலம்- 9
33. அழல் நோய் - 10
34. பீனிசம்- 76
35. நஞ்சுக் கடி- 76
36. நாக்கு-பல் நோய்- 76
37. கிரகணி நோய்- 25
38. மாலைக் கண்- 20
39. அதிசாரம்- 25
40. கட்டி- 12
41. கிருமி நோய்- 6
42. மூட்டு நோய்- 30
43. முதிர்ந்த கீல் நோய்- 20
44. கக்கல் (வாந்தி) நோய்- 5
45. கல் அடைப்பு- 80
46. வாயு நோய்- 90
47. திமிர்ப்பு நோய்- 10
48. விப்புருதி- 18
49. மேக நீர்- 21
50. நீர் நோய்- 5
51. நஞ்சுவாகம்- 16
52. செவி நோய்- 10
53. விக்கல்- 10
54. அரோசிகம்- 5
55. மூக்கு நோய்- 10
56. கடிநஞ்சு- 500
57. காயம், குத்து வெட்டு - 700
58. கிரந்தி- 48
59. பறவை நஞ்சு நோய்- 800
60. புறநீர்க் கோவை- 200
61. உதடு நோய்- 100
62. பிள்ளை நோய்–100. 

சனி, 30 நவம்பர், 2019

நோய்தீர்க்கும் மீன் உணவு

சிதம்பரம் அருகில் கிள்ளை ஆற்றுப் பகுதிகளில் அரிய வகை மருத்துவ குணம் உள்ள மீன்கள் உள்ளன. காரை, மட்லீஸ், கிழங்கான், பிலிஞ்சான், ஓரா, பொருவா, சித்தாழை, நரிக்கெண்டை போன்ற மீன்களைக்கொண்டு ஒரு வகையான வட்டார மீன்குழம்பு செய்கின்றனர். அதனை பூண்டு, மிளகுடன் சேர்த்துச் செய்தால் மருந்துக் குழம்பு என்றழைக்கின்றனர்.பேறுகாலத்தில் பெண்களுக்கு வலி நிவாரணியாகவும் சோர்வைப் போக்குவதற்கு உதவுவதாகவும் இக்குழம்பு இருக்கிறது.  கணவாய் மீனிலுள்ள மக்னீசியம், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

திலேப்பியாவில் உள்ள செலினியம் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பால்சுறா மற்றும் திருக்கை மீன்கள் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது.சாளை மீனில் உள்ள அயோடின் கழுத்துக் கழலை நோயைத் தடுக்கிறது. கெளுத்தியிலுள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. கெண்டை மீனிலுள்ள பொட்டாசியம் தசையின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. ஆளி மீனிலுள்ள தாமிரச் சத்தில் இன்சுலின் சுரக்கச் செய்யும் மருத்துவ குணம் உள்ளது. மத்தி, ஆரை, கவலை போன்ற மீன்களிலுள்ள ‘ஒமேகா 3’ அமிலமானது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை வளர்த்து, ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, நரம்புகளின் செயல்பாட்டை அதிகரித்து, நல்ல பார்வைத் திறனைத் தந்து உடம்பிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தக்கூடியவை.

-  உண்மை இதழ், 1-15.10.19

புதன், 20 மார்ச், 2019

மருந்துகளின் மூலங்கள்

சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகளை வைத்து சித்த மருத்துவத்தின் சிறப்பினை அறியலாம்.

அவை வருமாறு,
1. உப்பு வகைகள் – 25
2. உலோகங்கள் – 12
3. உபரசங்கள் – 120 
4.பாஷாணங்கள்-64
5.மூலிகைகள் - 1008
6.கடை மருந்துகள் - 64
ஆகும்.
இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன.இவ்வாறு எந்த மருத்துவத்திலும் இல்லாத அளவு சித்த மருத்துவத்தில்1293 எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில் 
1. உப்பு, 2. பாடாணம், 3. உபரசம், 4. இரசம், 5. உலோகம், 6. கந்தகம் என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன. மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப் படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே
பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன,

1. இரசம் செய்முறை 
2. இரசக் செந்தூரம் செய்முறை
3. வீரம் செய்முறை 
4. பூரம் செய்முறை
5. அரிதாரம் செய்முறை

இயற்கையில் கிடைக்கக் கூடிய பாஷாணங்கள் 32 ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் 32 பாஷாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாஷாணங்கள்
மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம். அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்–காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தை–குயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்கு–உடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


வெள்ளி, 23 நவம்பர், 2018

இச்சாபத்தியம்

அடுத்து இச்சாபத்தியம், என்பது கடுகு, நல்லெண்ணெய், வெண் பூசணிகாய், பரங்கிகாய், மாங்காய், தேங்காய், பூண்டு, பெருங்காயம், அகத்திக்கீரை, புகை, போதை, பகல்தூக்கம், ஆகியவை விளக்கி பத்தியத்தில் உண்பதை மட்டும் உண்ணுதல் இச்சாபத்தியம் என்று சித்தர்கள் சொன்னார்கள்.
மேலும் விவரங்களுக்கு siddhasankaran என்று டைப் செய்து பேஸ்புக் பார்க்கலாமே.

செவ்வாய், 17 ஜூலை, 2018

*சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்*🌱

🌿 *சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்*🌱

*சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.*
🌳அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, *சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.*

🌵 *உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.*

🐲 *கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்*🐾

☘குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

🐌 *கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்*🦂

🌲குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

🍁குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

🐉 *கிருமிகள் உருவாகக் காரணம்*🐛

🐞கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

🌴அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

🎋நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

👁  *கண் நோய்*:

🍃கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

🍀 *பொதுக் காரணங்கள்* :

🐹வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.
*அவை* : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

🐰 *சிறப்புக் காரணம்* :

👶சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

🌿 *காசநோய்* :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

🌿 *வெள்ளெழுத்து*

🍃கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

🍁முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

🍀கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

😨 *தலைநோய்* :

🍒உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

🍋தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

🍍ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

😨 *கபால நோயின் வகை* :

🕷வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

🍎தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

🍊 *அம்மை நோய்* :

🍏அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

🍇மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

🌽அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

🍒 *இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.*🐉

🎃 அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

🌿 *சித்த மருத்துவம்* கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி
2. பாலம்மை

3. மிளகம்மை
4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை
6. உப்புதரியம்மை

7. கடுகம்மை
8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை
10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை
12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை
14. தவளை அம்மை

என்பனவாகும்.
இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும்.
அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.
- முகமது அலி வி - நாட்டு மருத்துவம், முகநூல் பக்கம், 17.7.18
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿