பக்கங்கள்

புதன், 10 ஜனவரி, 2018

பண்டைய நாவித அறுத்துவர்கள்


-டாக்டர் சு.நரேந்திரன்



அறுவை மருத்துவர்கள்

வரலாற்றின் இடைக்காலத்தில் நாவிதர் களே பொதுவான மருத்துவ சிகிச்சையை எல்லோருக்கும் செய்து வந்தனர் என்றா லும் குறிப்பாகப் போர்க் காலங்களிலும், அதன் பிறகு ராணுவ வீரர்களுக்கு மருத்து வமும், அறுத்துவமும் புரிந்தனர்.  இதன் காரணமாக இவர்கள் தங்கள் வசம் தீட்டிய கத்தி ஒன்றை வைத்திருப்பது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக மருந்துகளால் நோய் குணமாகாது என்று மருத்துவர் களால் எண்ணப் பட்ட பொழுது அவர்கள் கட்டளைப்படி நாவிதர்கள் தேவையான அளவு கீறியோ அல்லது அட்டையைக் கடிக்கவிடுவதன் (Leeches) மூலமாகவோ இரத்தத்தை வெளியேற்றினர்.  இதை ஏன் மருத்துவர்கள் நாவிதர் களிடம் ஒப்படைத் தனர் என்றால், இது தனக்கு தரக்குறை வானது என்று எண்ணியதாலேயே ஆகும்.

பண்டைய காலத்தில் உலகளவில் நாவிதர்கள்

இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யும் நாவிதர்கள் சங்கம் (Guild of Surgeons) 
1318இல் உருவானது.  1505ஆம் ஆண்டு பாரீஸ் பல்கலைக் கழகத்தில் நாவி தர் அறுவை மருத்துவர்களைப் பேராசிரி யர்களாக நியமனம் செய்தது.  இங்கிலாந் தில் 1540இல் நாவிதர்கள் அறுவையாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்கள் (Company of Barber - Surgeons). ஆனால், நடைமுறையில் முடிவெட்டுதலையும், சவரம் செய்தலையும் செய்து வந்த நாவி தர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.  பிரான்சில் 1743ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 1745ஆம் ஆண்டிலும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நாவிதர்களிடமிருந்து பிரிக் கப்பட்டு இருந்தனர்.  1800ஆம் ஆண்டில் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் தோற்றுவிக் கப்பட்டதிலிருந்து நாவிதர்கள் இணைப்பை இச்சங்கம் முழுமையாகத் துண்டித்தது.  இதன் எச்சமாகவே இன்றும் இங்கிலாந்தில் எம்.ஆர்.சி.எஸ்.  என்ற அறுவை சிகிச் சைப்பட்டம் பெற்ற பின்பு டாக்டர் என்று அழைக்கப்படாது திரு, திருமதி, செல்வி (Mr, Mrs, Miss) 
என்றே பட்டத்திற்கு முன் போட்டுக் கொள்கின்றனர்.

நாவிதர்கள் அறுவை சிகிச்சையின் முன்னோடிகள்:

உலகில் நாவிதர்கள் அறுவை சிகிச்சை செய்தனர், பேராசிரியர்களாக இருந்தனர் என்பதைத் தாண்டி, இந்தியாவில் அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து வளர்த்தது நாவிதர்களேயாவர்.  இது குறித்து பண்டைய வரலாற்றறிஞரான டி.டி. கோசாம்பி, “போரில் அல்லது நோயில் மூக்கிழந்தோருக்கு மாற்று மூக்கு ஒட்டறுவை முறை, சமூகத்தினர் சற்று அருவருப்புடன் நோக்கிய நாவிதரின் கண்டுபிடிப்பே” என்கிறார்.  இது தவிர இந்நாவிதர்கள் சமூகத்தைச் சேர்ந்த உபாலி என்பவர் பவுத்த சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.  இப்பவுத்தர்கள் காலத்தில் தான் மெய்ஞான அறிவியலோடு அறுவை சிகிச்சையானது தோன்றி வளர்ச் சியடைந்ததாக வரலாற்றறிஞர் வாட்ஸ் குறிப்பிடுகின்றார்.

ஆனால், இன்றைய நிலையில் தமிழ் நாட்டுக் கிராமங்களில் மக்களுக்குத் தேவையான முக்கியமான பணிகளை செய்துவந்த 18 வகைத் தாழ்த்தப்பட்ட இனங்களுடன் நாவிதர்களும் அடங்குவர்.  இந்த இனத்தினர் யாவரும் குடிமக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.  இப்பதி னெட்டு வகை இனத்தவரும் குடிமக்கள் பிரிவினைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட போதிலும் நாவிதக் குலத்தைச் சேர்ந்தவர் மட்டிலும் குடிமக்கள் என்ற பெயரை இன்றுவரை தக்க வைத்துக் கொண்டிருக் கின்றனர்.  ஏனெனில் கிராம மக்களுக்கு முடி வெட்டும் சேவையுடன் மங்கலக் காரி யங்கள் மட்டுமின்றி அமங்கலக் காரியங் களுக்கும் அவசியமான பணிகளை நாவி தர்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

இவைகளைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றன.  சான்றாக மங்கலச் சடங்கு களின்போது அடிப்படைப் பணி களில் நாவிதர்கள் ஈடுபட்டிருந்தமையால் அவர்கள் மங்கல வினைஞர், மங்கலையன் என்றும், நாவிதப் பெண் மங்கலை என்றும் அழைக்கப்பட்டனர்.  இதுவே, கொங்கு மண்டல சதகத்தில் மங்கலை எனும் சொல் நாவிதப் பெண்ணைக் குறிப்பிடப் பயன் படுத்தப் பட்டுள்ளது.  மங்கலம் என்னும் சொல் மருத்துவ குலத்தைச் சேர்ந்தோரின் பெயர்களுடன் இணைத்துக் காணப்படு வதாக முதுநிலை கல்வெட்டாய் வாளர்கள் ஏ. சுப்பராயலுவும், கே.ஜி. கிருஷ்ணனும் குறிப்பிட்டுள்ளார்கள்.  இவ்வாறு பெயர் களுடன் மங்கலம் என்ற அடைமொழியும், இணைக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கும் சில சான்றுகளாவன. “மூவேந்தர் மங்கலப் பேரரையன் மாறன்காரி”, “பாண்டி மங்கல விசையரையன் மாறன் எயினன்” என்ப தாகும்.

அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புக ளுக்கும், வளர்ச்சிக்கும் தேவையானது உடல்கூறு அறிவு. இதற்குச் சவப் பரி சோதனை அவசியம்.  இது இந்தியாவில் இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு விதி யாகப் பிணம் எரிக்கப்படுவதாலும், அல்லது ஆற்றில் மிதக்க விடுவதாலும் மற்றும் மனு சாஸ்திரம் ஒரு சண்டாளனை, ஒரு பிரே தத்தை அல்லது பிரேதத்தைத் தொட்ட ஒருவனை யதேச்சை யாகத் தொட நேர்ந்து விட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனி பரிசுத்தத்தைப் பெறுவான் என்பதாலும், புத்த சமண மதங்களும், திருக் குறளும், கொல்லாமையைப் போற்றுவதா லும் உடல்கூறு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே தழைக்கவில்லை எனலாம்.  இக்காரணத்தை மிகவும் துல்லிய மாக ஆய்ந்த சட்டோபாத்தி யாயா அறுவை சிகிச்சைக்கான வளர்ச்சியில் மேல் சாதியி னருக்கு எவ்விதப் பங்கும் இருந்திருக்க வில்லை என்பதை விளக்கமாக “உடலை முதன்மைப் படுத்தியதால்தான் தந்திரர் ரசவாதம், ரசாயனம் போன்ற அறிவியல் களை வளர்க்க முடிந்தது.  வைதீகர், தூய ஆன்மாவைத் தேடியதால் உடம்பின் மீது கவனம் செலுத்தவில்லை.  பிணங்களை வைத்துக் கீழ் சாதியினரே அறுத்து ஆராய்ந் தார்கள்.  இதை மேல் சாதியினர் தீட்டாகக் கருதியதால் ஒதுக்கினார்கள்.  தவிர ‘தந்தி ரரின் சவ சாதனை’ மனித உடல் பற்றி அவர் கள் அறிய உதவியது.  இன்றும் கூட, (1959) பிணத்தைத் தொட மேல்சாதியார் மறுப்ப தால் அறிவியலை மறுக்கிறார்கள்”, என்கிறார்.

சோழர் காலத்தில் அறுவை மருத்துவர்கள் - நாவிதர்கள்

சோழர் காலத்தில் நாவிதர்கள் மிகவும் உன்னத நிலையில் சிறப்புற்றிருந்தது கல் வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது.  இராஜராஜனின் கி.பி. 1014-ஆம் ஆண் டைய கல்வெட்டொன்றில் பஞ்சவன் மங் கலப் பேரரையன் அனையன் பவருத்திரன் மற்றும் இராஜராஜ பிரயோகத்தரையன் என்னும் பெயர் கொண்ட அறுவை சிகிச்சை செய்தவர்களைப் பற்றிக் குறிப் பிடப்பட்டுள்ளது.  பிரயோகம் என்ற சொல் மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடும் சொல் லாகும்.  எனவே பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவ சிகிச்சை செய்பவனைக் குறிப்பிடு வதாகும். அனையன் பவருத் திரன் என்பவர் கோலினமை (கோலினமை - கோலி - மயிர்) என்ற தொழிலில் வல்ல வன் என்ற குறிப்பு வருகின்றது.  இப்பெயருக்கு அருகில் இராஜராஜ பிரயோகத் தரையன் என்ற சொல் மருத்துவரைக் குறிக்கும்.  அம்பட்டன் என்ற சொல்லும் மருத்துவரைக் குறிக்கும்.  எனவே கோலினமை என்ற சொல்லும் மருத்துவத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும் என்று கல்வெட்டாய்வாளர் ஏ. சுப்பராயலு கருத்துத் தெரிவிக்கின்றார்.

திருவிடலூர் சிவயோகநாதர் ஆல யத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் கி.பி. 1016ஆம் நாளிட்ட கல்வெட்டில் இராணி குந்தவை ஆர்க்காட்டு கூற்றம் சிறீ பராந்தக சதுர்வேதி மங்கலத்துச் சபையிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி அரையன் உத்தம சோழன் என்ற நாவிதனுக்குச் சல்லிய போகமாக வழங்கியதாகக் கூறப்பட்டுள் ளது. ((ARE No. 351/1907)

இதே ஆலயத்திலுள்ள மற்றொரு கல் வெட்டில் குந்தவை, இராஜகேசரி சதுர் வேதி மங்கலத்திலுள்ள ஒரு வேலி 4 மா நிலத்தையும், வேம்பத்தூரிலுள்ள ஒரு வீட்டையும் அரையன் உத்தம சோழன் என்ற இராஜேந்திர சோழ பிரயோகத் தரையன் ஆகிய அம்பட்டனுக்குச் சல்லிய கிரியா போகமாக (அறுவை மருத்துவத் தொழிலை விருத்தியடையச் செய்வதற் கான மானியத்தின் பெயர்) வழங்கி யிருப் பது தெரிய வருகின்றது. (ARE No.  350/1907)

இவ்விடத்தில் மருத்துவக் கண்டுபிடிப் புக்கு வித்திட்டவர்கள் இச்சாதியின ஆண் களா? அல்லது பெண்களா? என்ற கேள்வி முக்கியமாக எழுகின்றது.  பண்டைய காலத்தில் சடங்குகளைப் பெண்களே முன் னின்று நடத்தினர்.  இன்றும் கிராமப்புறங் களில் “பாட்டி வைத்தியம்” என்ற பெயர் புழக்கத்தில் இருப்பது அன்று பெண்களே மருத்துவம் செய்தனர் என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இதற்கு ஒரு இலக்கிய சான்றாகக் கொங்கு மண்டலச் சதகத்தில் கார்மேகக் கவிஞர் (9ஆம் நூற்றாண்டு) விரிவாக எடுத் துரைக்கின்றார்.

கொங்கு நாட்டு மன்னனின் மகள் பிர சவ வலியால் துன்புற்றபொழுது சிசு வெளிவராத நிலையில் ஒரு நாவிதப் பெண், வயிற்றைக் கீறி (Caesarean) சிசுவை வெளியே எடுத்ததைச் சிறப்புற விளக்குவது இங்கு நினைவு கூரத்தக்க தாகும்.

இதுபோலவே வயிற்று வலி ஏற்படும் குழந்தைகளுக்குக் குடல் தட்டி இன்று வரை நிவர்த்தி அளிப்பதும் பெண்களே ஆகும்.  மேலும் நாவிதப் பெண்கள் இன் றும் பல கிராமங்களில் பிரசவம் பார்த்து வருவது என்பது ஆதிகாலத்தில் மருத்து வத்தைக் கண்டுபிடித்து அதனை வளர்த்து இன்று வரையில் தக்க வைத்துள்ளதின் எச்சமென்பதாகும்.

நாவிதப் பெண்கள் மருத்துவச்சி என்று அழைக்கப்பட்டு, காலனி அரசு காலத்திலும் பணிபுரிந்துவந்தபொழுது இவர்களின் மருத்துவமுறை மேலை மருத்துவத்தை ஒத்து வராது, தூய்மையற்று இருந்ததன் காரணமாக, 1923இல் காலனி அரசு இவர்கள் பணியை மேம்படுத்த பல முயற்சி களை மேற்கொண்டது.  மருத்துவப் பள்ளி கள், கல்லூரிகள் தோன்றிய பிறகும் தங்கள் பொருளாதாரப் பின்னடைவினால் மேலை மருத்துவம் கற்க வாய்ப்பின்றி போனார்கள்.  ஆகவே, இவர்களுக்குத் தெரிந்த தமிழ் சித்த மருத்துவத்தைச் சிக்கெனப் பிடித்தபடி மருத்துவம் புரிந்தனர்.  யூனிசெப் மற்றும் உலக சுகாதார கணக்குப்படி (1967) மருத்து வச்சிகளால் மட்டும் 70 விழுக்காடு பிரச வங்கள் நடைபெற்றுள்ளதாக அறிய முடி கின்றது.

இதுபோலவே நாவித வகுப்பு ஆண்கள் அறுவை சிகிச்சை உட்பட பல மருத்துவப் பணிகளைப் புரிந்துள்ளனர். இவர்களால் மருத்துவம் பெற்றுக்கொள்பவர்கள் மேல் குடி மக்களாக இருப்பினும் இவர்கள் கூறு வதைக் கேட்பது மக்கள் மத்தியில் வழக் கமாக இருந்ததன் காரணமாக “எத்தைச் சொல்வானோ பரிகாரி அத்தைக் கேட்பான் நோயாளி” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

முடிவாக, நாவிதர்களை நோக்கும் போது, உலக அளவில் அறுவை மருத்துவ முன்னோடிகளாக, அறுவைக்கான கத் தியை வைத்திருந்தவர்கள் இன்றைய நிலை யில் முடி வெட்டும் கத்திரிக் கோலுடன் வலம் வருவது ஏன் என்பதை இன்னும் விரி வாகக் கூறுபோட்டு ஆராய வேண்டியவர் களாக உள்ளோம் என்பது தெளிவாகின்றது.

- நன்றி: நியூ செஞ்சுரியின்

“உங்கள் நூலகம்” ஜூன் 2017
- விடுதலை ஞாயிறு மலர், 23.12.17

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

குடல் புற்று நோயைத் தடுக்கும் சாம்பார்

தினமும் சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்று நோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச் சியாளர்கள்.

மணிப்பால் மருந்தியல் கல்லூரியும், மணிப்பால் பல்கலைக்கழகமும் இணைந்து தென்னிந்தியர் களின் முக்கிய உணவான சாம்பாரில் குடல் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது எனக் கண் டறிந்துள்ளனர்.

மருந்தியல் ஆய்வாளர்கள் வி.கங்கா பிரசாத், அல்பி பிரன்சிஸ், கே. நந்தகுமார் ஆகியோர் மேற் கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் பார்மகோக் னாஸி மேகசின் எனும் மருந்தியல் இதழில் சமீ பத்தில் வெளியாயின.

உலகளவில் நடத்தப்பட்ட புற்றுநோய் தொடர் பான ஆய்வுகளில் அதிக அளவு மஞ்சள் உட் கொள்வதால் குடல் புற்றுநோய், மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவரீதி யான ஆய்வில் அமெரிக்கர்களைத் தாக்கும் புற்று நோய்களில் குடல் புற்றுநோய் மூன்றாவது இடத் தில் உள்ளதும் அது பெரும்பாலும் உணவுப் பழக் கத்துடன் தொடர்புடையதாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதிக அளவு மஞ்சள் மற்றும் ஆன்டி ஆக் சிடண்ட் அதிகம் கொண்ட வெங்காயம் சேர்த்த உணவுப் பொருட்களில் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என் கின்றனர் ஆய்வுக் குழுவினர்.

மரபுரீதியாகச் சிலருக்கு, குடல்களில் பாலிப்ஸ் எனும் சிறு கட்டிகள் தோன்றும். முறையாகக் கவனிக்காமல் விட்டால், இவை பின்னாளில் புற்று நோயாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம். இந்தக் கட்டிகளுக்கு ஏற்ற அருமருந்தாக சாம்பார் இருப்ப தாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அந்த சாம்பாரில் உள்ள மசாலாப் பொருட்கள்தான்.

சாம்பாரில் உள்ள மல்லிவிதை, வெந்தயம், மஞ்சள், கறுப்பு மிளகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங் காயம் ஆகிய மசாலாப் பொருட்களால் புற்று நோய்க் கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத்தின் புற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் முதன்மை ஆய் வாளர் ஒருவர் கூறும்போது சாம்பாரில் பயன்ப டுத்தப்படுகிற ஒவ்வொரு மசாலாப் பொருளும் தனித்தன்மை உடையதாக உள்ளது. சாம்பாரில் உள்ள சீரகம், பெருங்காயம் போன்ற பொருட்கள் உடலுக்குச் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன. செரிமானம் நன்றாக இருந்தாலே, குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்.

பொதுவாக சாம்பார் அதிகளவு காரம் இல்லாத உணவாக இருப்பதால் குடலின் உட்புறம் பாதுகாக் கப்படுவதுடன், குடல் புற்றுநோயை உண்டாக்கும் டைமெத்தில்ஹைட்ராக்சின் எனும் காரணியை, சாம்பாரில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுகின்றன என் கிறார் புற்றுநோய் மருத்துவர் எஸ்.வி.எஸ்.எஸ்.பிரசாத்.

இந்தியாவைப் பொறுத்தவரை குடல் புற்று நோயின் தாக்கம் வடஇந்தியர்களுக்குத்தான் அதி களவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர் களின் உணவில் கோதுமை அதிக அளவு இருப் பதே. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், தென்னிந்தியர்களின் உணவு முறையில் எளிதில் செரிமானமாகக்கூடிய பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் குடல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களில் 70 சதவீதத்தினர் வடஇந்தியர்கள். பொதுவாக வறுத்துப் பொடித்த மசாலாப் பொருட் களை அவர்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்கின் றனர். ஆனால், தென்னிந்தியர்களின் உணவில் பெரும்பாலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மஞ்சளில் பொதுவாகவே புற்றுநோயைத் தடுக்கும் அம்சங்கள் உண்டு. அதனால், இவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்கிறார் புற்றுநோய் மருத்துவர் டி.பி.எஸ்.பண்டாரி.
-விடுதலை,4.9.17

வெள்ளி, 11 நவம்பர், 2016

ஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம்


ஒவ்வொரு இனமும் தனக்கென தனித்துவமான பாரம்பரியம் கொண் டுள்ளது. மொழி, கலைகள், பண்பாட்டு கூறுகள் மற்றும் மருத்துவம் இவை தான் பெரும்பாலும் ஒரு  இனத்தின் அடையாளங்களாக உள்ளன.
மொழியை அழித்து விட்டால் இனத்தின் வரலாற்றை எளிதில் அழித்து விடலாம்.  ஏனென்றால் மொழி என்பது தொடர்பு கருவி. வர லாற்றின் நீட்சி. அது சார்ந்த இனத்தின் ஆவணம்.
தமிழின் [திராவிடத்தின்] தனி சிறப்பு என்று எங்கும் பார்க்க முடியாத சூழல்.....கலைகள், பண்பாடு ,மருத்துவம் என எதிலும் ஆரிய சமஸ்கிருத கலப்பு.....இதனை தமிழன் உள்வாங்கிய கூறுகள் என்று கூறுவதை விட திரா விடத்தை,
[தமிழை] அழிக்க திட்டமிட்டு திணிக்கப் பட்ட கூறுகள் என்று சொல்வதே மிக சரியானது.  அது ஆரியத்தின் உள்வாங்கி அழிக்கின்ற தத்துவமோ,இல்லை அடிப்படையை அசைத்து பார்க்கின்ற வன்மமோ எதிலோ இழந்தோம் இருந்தவற்றை எல்லாம் தமிழர்களாகிய நாம்.
நோயை விட கொடிய துன்பம் ஏது? என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் நமக்கென்று பொக்கிஷமாக ஒரு மருத்துவ முறையை விட்டு சென்றுள் ளனர். தாது, தாவர ஜீவப் பொருள் கள் என அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தி உள்ளனர்.
நோய் நாடி pathology 

நோய் முதல் நாடி etiology

அது தணிக்கும் வாய்நாடி treatment
என அனைத்தையும் பேசி உள்ளான் ...
உடம்பை பாதுகாக்கும் அத்தனை வழிமுறைகளையும், (காய கற்ப முறை கள், யோகம்) நோய் வந்தால் நீக்கும் வழிகளையும வகுத்து உள்ளனர்.
இன்னமும் தமிழ் மண்ணின் மருத்துவர்களான சித்தர்கள் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்களாகவோ அல்லது வழிபாட்டு முறைகளை விமர் சிப்பவர்களவோ தான் இருந்து உள் ளனர்.
“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே ...
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையிலே’’ -
சிவவாக்கியர் சித்தர் பாடல் மூலம் அறியலாம்.
அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி   என அணுவையும் துளைக்க முடியுமென சொன்னது நம் மருத்துவ   அறிவியல்.
கடினமான இரும்பு,காந்தம் போன்ற உலோகங்களை நீரில் மிதக்கும் பற் பங்கள் ஆக்கியது நம் மருத்துவ  அறி வியல்.
கண்ணில் காணும் பச்சை எல்லாம் நோய் தீர்க்கும் மருந்துகள் என   பாடம் நடத்தியது நம் மருத்துவ அறிவியல்.....
4448 நோய்கள் என வகுத்து நுணுக்கமாக  சொல்லி தந்து இன்றைக் கும் உள்ள நோய்களுக்கும் தீர்வாய், தீர்க்கமான அறிவியலாய் நிமிர்ந்து நிற்கிறது.
அன்றைக்கு இருந்த சித்தர்கள் ஆன் மாவுக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு என்று உளறி வைக்கவில்லை.
இன்றைக்கோ சித்த மருத்துவத்தின் இடை செருகளாய் ,ஜோதிடம், பஞ்ச பட்சி, சரநூல்...என்ற கேவலங்கள்.
மூட நம்பிக்கையின் புதர்களாக மண்டி கிடக்கிறது  நம் அறிவியல் மருத் துவம் ....
எதையெல்லாம் புனிதம் என்றார் களோ , அவற்றை எல்லாம் ஆராய்ச் சிக்கு அப்பாற்பட்டதாய் விலக்கி வைத்த  மூடத்தனம் இதிலும் உள்ளது....
ஆராய்ச்சிக்கு  உட்படாததை அறி வியல் உலகம் என்றைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது?
சித்தர்களின் முதல் கோட்பாடாய் சைவ சித்தாந்தை போதிக்கும் அவலம். இதுவே சித்தத்தின் முதல் சறுக்கல். இந்திய மருத்துவத்துறையின் ஒரு அங்கமாக 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், சில தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
5லு ஆண்டுகால பட்டப்படிப்பு [B.S. M.S] மேலும் 3 ஆண்டுகால பட்ட மேற்படிப்பு M.D. [S] என ஏறத்தாழ 8லு ஆண்டுகள் படிக்க வேண்டி உள்ளது. அதன் பாடத்திட்டம் திட்ட மிட்டு திணிக்கப் பட்ட ஆரிய கூறுகள் அடங் கியது. அறிவியலுக்கு எதிரானது. ஆரியத்தின்  தாக்கம் நிறைந்தது. இன்னமும், 65 ஆண்டுகளாக மாறாத ஒரே  பாடத்திட்டம் கொண்டது....
ஆரியர் என்பவர் அரியர், மேன்மை யானவர், தமிழ் சமூகத்தில் மேம் பட்டோர் என்ற தவறான வரலாறும்  ,பிராமணர் என்றால் ஒழுக்கமானவர் என்றும் [பாடநூல்- தோற்ற கிராம ஆராய்ச்சி] சக்கிலியர், பறையர் இருக்கும் இடத்தில் வீடு கட்டக்கூடாது என்றும் [பாட நூல்  நோய் இல்லா நெறி பக்கம் 37] என இன்றைக்கும் சட்டத்திற்கு முரண் பட்ட , மனு தர்ம மொழிகளை போதிப்பதாக உள்ளது.
பாடத் திட்டம் வகுத்தவர்கள் மற்றும் எழுதியவர்கள்  மிக சிறந்த ஆரிய அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை இதன் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு தமிழ் மருத்துவம், septic tank தவற விடப் பட்ட புதையல் மாதிரி மூட நம்பிக்கைகளோடு மூழ்கி கிடக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு இந்த மருத்துவத்தை நாம் விட்டு செல்லும் போது,    திருத்தப்பட்ட தத்துவங்கள்    முழுமையாக்கப்பட்ட அறிவியல் நிறைந்ததாக முழுக்க முழுக்க அறிவியல் சார்பு உடையதாக மாற்றப்பட வேண்டும்.
மத்தியில் எந்த ஆட்சி அமைந்தா லும், இந்திய மருத்துவத்துறையில்  ஆயுர்வேதத்திற்கே முன்னுரிமை என்பது எழுதப் படாத இந்திய அரசியல் விதி. ஏனென்றால் அது ஆரிய மருத்துவம். பாற்கடலை திருமால் கடைந்த போது கலசத்தோடு வந்த தன் வந்திரியால் இயற்றப்பட்டது [என்ன ஒரு கட்டுக்  கதை?
இதற்கு கோடி, கோடியாக செல வழிக்க அரசு எப்போதும்  தயாராக இருக்கும். அது கடவுளின் மருத்துவம் அன்றோ [?]
ஆயுர்வேதமும்,சித்த மருத்துவமும் ஒன்று என்று பொதுப்படையாக அறியப்பட, இரண்டிற்கும் உள்ள வித்தி யாசம் என்ன என்றால் அது ஆரியத் திற்கும், திராவிடத்திற்கும் உள்ள வித்தியாசம் என தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இரண்டும் ஒன்றுபோல் இருக்க காரணம் , திராவிட மருத்துவத்தை சிற்சில மாற்றம் செய்து உருவானதே ஆயுர்வேதம்.....அது முழுக்க முழுக்க இந்துத்துவ மருத்துவம் ....இந்து கடவுள் களோடு சேர்த்து பரிமாறப்படுவதால் தான் அது இந்திய மருத்துவம் ஆக உயர்ந்து உலகம் முழுக்க அடையாளப் படுத்தப் படுகிறது.
கலப்பு செய்யப்பட்ட தமிழ் மருத் துவத்தில் இருந்து மத சாயத்தை நீக்கி னால் தான் முழுமையான மருத்துவ அறிவியல் பெற முடியும்.
எப்படி தமிழ் சமூதாயத்தின்  பண் பாட்டுடன் ஆரியம் கலந்ததோ, இன் றைக்கும் பிரிக்க முடியாததாக இருக் கின்றதோ, அது போன்றே தமிழ் மருத் துவத்திலும் ஆரியம் கலந்துள்ளது.
மீட்டெடுப்பு பணி என்பது தமிழ் மருத்துவத்திலும் அவசியம்.
Dr.C. கவுதமி தமிழரசன் M.D[S]
-விடுதலை ஞாம.20.2.16

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு!

அல்சரை உண்டாக்குவதில், ‘ஹெலிகோ பேக்டர் பைலோரி’ என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும், மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்து வதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.
அறிகுறிகள்: குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச் சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.
ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.
சீரகம், அதிமதுரம், தென்னம்பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.
சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.
சேர்க்க வேண்டியவை:
கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம், தயிர், மோர், இளநுங்கு.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
கடைப்பிடிக்க வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.
-உண்மை,16-30.6.16
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
¨    இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்ணியம் காத்தல், தீண்டாமை எனும் இழிவை நீக்குதல், மதச் சார்பின்மை, அறிவியல் வளர்ச்சி, மனித நேயத்தைப் பேணிக் காத்தல் ஆகியவை தாகூரின் சிந்தனைகள்.
ரவிந்திரநாத் தாகூர்

மருத்துவத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

-ஒளிமதி
தமிழர் பல்துறை அறிஞர்களாயும், வல்லுநர்களாயும் வாழ்ந்து உலகுக்கு வழிகாட்டியவர்கள். உலக நோக்கு, மனித நேயம், சமத்துவம் போன்ற உயர் பண்புகளை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட அவர்கள், போர், கலை, வணிகம், ஆட்சி, தொண்டு, கல்வி என்று பலவற்றில் தனித்த முத்திரைப்பதித்த தமிழர்கள் கப்பல் கட்டுதல், கட்டடங்கள் கட்டுதல், அணை கட்டுதல், நகர் அமைத்தல், ஆடை நெய்தல், அணிகலன்கள் செய்தல், வான் ஆய்வு என்று பலவற்றில் உலகில் முன்னிலையில் நின்றவர்கள், மருத்துவத்திலும் தலைசிறந்து விளங்கினர்.
உடற்கூறு ஆய்வு, உடலுக்கு வரும் நோய்கள், நோய்க்கான காரணங்கள், நோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் தீர்க்கும் மருந்துகள் என்று மருத்துவக் கூறுகளில் நுட்பமான அறிவு பெற்று விளங்கினர்.
தமிழர்களின் உணவு மருத்துவ அடிப்படையிலே அமைக்கப்பட்டது. உணவே மருந்தாக அமையும் வகையில் உணவைச் செய்தனர்.
குடும்பத்தில் உள்ள முதியவர்களே மருத்துவர்களாய் விளங்கினர். பச்சிலைகள், வேர்கள், பட்டைகள், பூக்கள், காய்கள், கனிகள், விதைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் உடற்பாகங்கள், பற்பங்கள், உலோகங்கள், மண், நஞ்சு என்று பலவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தினர். சாறு எடுத்தல், பொடியாக்குதல், அரைத்து சாந்தாக்குதல், புடம் போட்டு பொடியாக்கல், மாத்திரைகள் ஆக்குதல், தைலங்கள் ஆக்குதல், களிம்புகள் செய்தல் என்று பலமுறைகளில் மருந்துகளைச் செய்தனர்.
மருத்துவத்தில் தேர்ந்தவர்கள் சித்தர்கள் எனப்பட்டனர். எனவே, தமிழ் மருத்துவம் சித்தர் மருத்துவம் என்றே அழைக்கப்பட்டது.
நாடித் துடிப்பை வைத்தே உடல்நிலையை, உடல் நோயைத் துல்லியமாகக் கண்டறிந்தனர்.
உடலை வாயு உடம்பு, பித்த உடம்பு, சளி உடம்பு என்று மூன்றாகப் பிரித்து அதற்கேற்ப மருந்துகளைத் தரும் முறையை உருவாக்கினர்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு
இத்தகு சிறப்பும், நுண்மையும் பெற்று விளங்கிய தமிழர் மருத்துவத்தில் ஆரியர் நுழைந்து தமிழரின் மருத்துவச் சிந்தனைகளை தமதாக்கியதோடு, தமிழர் மூலத்தை அழித்தனர்.
தமிழரின் மருத்துவச் சிந்தனைகளை, மருந்துகளை சமஸ்கிருதத்தில் பெயர்த்து ஆயுர்வேதம் என்று உருவாக்கி அது தங்கள் மருத்துவம் என்றனர். இதனால் தமிழர் மருத்துவம் பொலிவிழக்க போலி மருத்துவமான ஆயுர்வேதம் ஆதிக்கம் செலுத்தியது.
மூடநம்பிக்கைகளைப் புகுத்தினர்:
அறிவியல் கண்ணோட்டத்தில் மருத்துவத்தை அமைத்து பின்பற்றி நோய் தீர்த்து வாழ்ந்த தமிழரிடையே மூடநம்பிக்கைகளை ஆரியர்கள் நுழைத்தனர்.
நோய் தாக்குதலை பேய் தாக்குதல் என்று கூறி, விபூதி போடுதல், தாயத்து கட்டுதல், மந்திரம் ஓதுதல், பிராத்த¬னை செய்தல், படையல் போடுதல், பலியிடுதல், நேர்த்திக்கடன் செய்தல் என்று பலவற்றைப் புகுத்தி, தமிழரின் அறிவைக் கெடுத்து மூடத்தனத்தில் மூழ்கச் செய்தனர்.
மருத்துவத்தை மறைபொருளாக்கினர்:
தங்கள் வேதத்தை பிறருக்கு மறைத்து மறையாக்கிய ஆரியர்கள், தமிழர் மருத்துவத்திலும் தலையிட்டு, ஆதிக்கம் செலுத்தி, அதையும் பிறருக்கு சொல்லக்கூடாத மறைபொருளாக்கினர். குழூக் குறிகளை உருவாக்கினர். நேரடியாகச் சொல்லாது பொருள் கொள்ளும்படியான சொற்களை, குறிப்பாலுணர்த்தும் சொற்களை உருவாக்கி மருத்துவத்தை குழப்பம் நிறைந்ததாக்கியதோடு, ஒரு குழுவுக்குள் ஒடுக்கவும் செய்தனர்.
சுயநலத்துக்காக அறிவை ஒளித்தல் என்ற ஆரியப் பண்பாடு தமிழர் மருத்துவத்தில் நுழைந்து, தமிழ் மருத்துவத்தின் தனிச்சிறப்பை, வளர்ச்சியை, பொதுப் பயன்பாட்டைக் கெடுத்தது.
சமஸ்கிருதத்தை நுழைத்தனர்:
இன்றைக்கு எப்படி ஆங்கிலத்தை மிகையாகக் கலந்து பேசுதல் நடைமுறையில் உள்ளதோ, நாகரிகமாகக் கருதப்படுகிறதோ அவ்வாறே ஆரியர்கள் நுழைத்து தமிழ்மொழியைக் கெடுத்ததன் விளைவாக, தமிழர் மருத்துவ பாடல்களிலும் சமஸ்கிருதம் மிகையாகக் கலந்து பொருள் கொள்ளும் சிக்கலை உருவாக்கி, தெளிவைக் கெடுத்தது.
தமிழ்நாட்டு மூலிகைகளையும், உலோகங்களையும் கொண்டு தமிழ் மருத்துவர் கண்டதே தமிழர் மருத்துவம். இத்தமிழ் மருத்துவம் தோன்றவும் வளரவும் காரணமாயிருந்தவர்கள் சித்தர்கள். தமிழ்நாட்டு மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்த இவர்களின் அனுபவங்களின் விளைவே தமிழ் மருத்துவ முறை எனலாம். ஆனால், தற்போது கிடைக்கும் தமிழ் மருத்துவ நூல்களில் காணப்பெறும் சொற்களில் எழுபத்தைந்து விழுக்காடு நோய்ப் பெயர்கள், மருந்துப் பெயர்கள், பொருட் பெயர்கள் _ அனைத்தும் வட சொற்களாகவே விளங்குகின்றன. வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்தபோது இவை எழுதப் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழர் கண்ட மருத்துவத் துறையில் தற்போது வழங்கிவரும் சொற்களும், இணையான தமிழ்ச் சொற்களும் சான்றுக்காகச் சில கீழே தரப் பெற்றுள்ளன.
மூலிகை வகை:
சௌந்தர்யம் -_ வெள்ளாம்பல்
ப்ருந்தா _- துளசி -
சப்ஜா - திருநீற்றுப் பச்சை
கூஷ்பாண்டம் -_ பூசணி
சாயாவிருட்சம் _ நிழல்காத்தான்
ரத்தபுஷ்பி _ செம்பரத்தை
மருந்து வகை:
ஔஷதம் _ அவிழ்தம்
லேஹியம் _ இளக்கம்
பஸ்பம் _ நீறு
கஷாயம் _ குடிநீர்
ப்ரமாணம் _ அளவு
சூரணம் _ இடிதூள்
நோய் வகை:
திருஷ்டி _ கண்ணேறு
க்ஷயம் _ என்புருக்கி
ஆஸ்துமா _ ஈளை இரைப்பு
அரோசகம் _ சுவையின்மை
அஜீர்ணம் _ செரியாமை
குஷ்டம் _ தொழுநோய்
மருந்துப் பொருள் வகை:
சொர்ணமாட்சிகம் _ பொன்னிமிளை
நேத்ரபூஷ்ணம் _ அன்னபேதி
ப்ரவளம் _ பவழம்
நவநீதம் _ வெண்ணெய்
லவணம் _ உப்பு
தசமூலம் _ பத்துவேர்
த்ரிகடுகு _ முக்கடுகு
த்ரிபலா _ முப்பலா
ஆரியர்களால் திராவிடர்களிடம் இருந்து பெறப்பட்டு மெருகேற்றப்பட்ட மருத்துவம், சித்த மருத்துவமாகவும், ஆயுள்வேதமாகவும் ஒரு தாய் வயிற்றில் உதித்த, இருவேறு மகவுகளாக வளர்ந்து மிளிர்ந்தன.
எனவே போதிய வேறுபாடுகள் ஏதும் இல்லாத இவ்விரு மருத்துவ முறைகளும் ஒன்றே என்று கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இரண்டிற்கும் திராவிட மருத்துவ முறையே தாய் மருத்துவமாகும்.
ஆயுர்வேத மருத்துவம் தமிழ் மருத்துவமே!
திராவிடம் என்பது வடமொழிச் சொல். இது சிந்து சமவெளியில் இருந்து துரத்தப்பட்டுத் தக்காணத் தீபகற்பத்தை நோக்கி ஓடிவந்த மக்களைக் குறிக்க, ஆரியர் பயன்படுத்திய சொல். ஓடிவந்த மக்கள் தங்களைத் தாங்களே திராவிடர் என்று ஒருபோதும் குறிப்பிட்டது கிடையாது. இவ்வாறாயின் அவர்களின் இயற்பெயர்தான் என்ன? தமிழர்கள்.
அன்றைய தமிழ் மருத்துவமே, தமிழ்மொழியில் சித்த மருத்துவமாயும், சமஸ்கிருத மொழியில் ஆயுர்வேதமாகவும் ஆகின.
சித்தர்கள் தோற்றுவித்த சித்தர் மருத்துவந்தான் சித்த மருத்துவம், அதன் மற்றொரு பெயர் தமிழ் மருத்துவம் என்று பலர் கூறுவர். சித்தர்கள் தோற்றுவித்தது சித்த மருத்துவம் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே தமிழ் மருத்துவம் என்றால் சரியல்ல.
சித்த மருத்துவத்துடன் தொடர்புள்ள அகத்தியர், திருமூலர் முதலான சித்தர்கள் காலம் கி.பி.500க்குப் பிற்பட்டது என்பதே ஆராய்ச்சியாளர்கள் கருத்து. மேலும் சித்தி, சித்தா, சித்தர் என்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லாததும் சித்த மருத்துவத்தின் தோற்றம் கி.பி.500க்குப் பிற்பட்டே இருக்க இயலும் என்பதற்கு மற்றொரு காரணம். எனவே, தமிழ் மருத்துவத்தின் மற்றொரு பெயர்தான் சித்த மருத்துவம் என்றால் தமிழ் மருத்துவத்தின் தோற்றமே காலத்தால் பிற்பட்டு உண்மைக்குப் புறம்பாகிவிடும்.
சித்த மருத்துவக் காலத்திற்கு முன் தமிழகத்தில் மருத்துவம் தழைத்திருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அந்த மருத்துவ முறைக்கு மருந்து, மருத்துவம் என்ற பொதுப்படையான பெயர்களே இருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் தவிர எல்லாச் சங்க இலக்கியங்களும் மருந்து என்ற பொதுப் பெயரையே குறிக்கின்றன. Medicine என்றால் இன்று நவீன மருத்துவத்தை மட்டுமே குறிப்பது போல மருந்து என்றால் அக்காலத்தல் தமிழ் மருத்துவத்தை மட்டுமே குறித்திருக்க வேண்டும். வள்ளுவரும் எந்தச் சிறப்புப் பெயரும் கொடுக்காமல், மருந்து என்றே ஓர் அதிகாரத்திற்குப் பெயர் சூட்டியது மற்றொரு சான்று.
இருப்பினும் ஆயுள்வேதம் என்று சிறப்புப் பெயரும் பண்டைய தமிழ் மருத்துவத்திற்கு இருந்தது. ஆயுள்வேதரும், காலக்கணிதரும் என்ற சிலப்பதிகார வரியால் தெரியலாம்.
அதர்வண வேதத்தின் ஒரு அங்கம் ஆயுள்வேதம் என்பது வடமொழிப் பண்டிதர்-களின் கணிப்பு. இருப்பினும் ஆயுள்வேதம் என்ற சொல் நான்கு வேதங்களிலும் இல்லை.
வடமொழி ஆயுள்வேதத்தின் இணையற்ற நூல்களாகக் கருதப்படும் சரகசம்கிதா, சுசுருத சம்கிதா ஆகியவை ஆயுள்வேதம் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை ஆயுள்வேதா என்ற சொல்லை வடமொழி மருத்துவ நூற்கள் பயன்படுத்தாமையும், அதற்கு முற்பட்ட சிலப்பதிகாரம், ஆயுள்வேதம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பினும், ஆயுள்வேதம் என்பது தமிழ் மருத்துவத்தையே குறிக்கும் என்பதும் பொருந்தும் என்று நிறுவுகிறார் ஜே.ஜோஸப்தாஸ், மருத்துவர். (மருந்தியல் துறை, பட்ட மேற்படிப்புப் பகுதி, அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை).
-உணமை,16-31.1.16